பதிவுகளில் எழுத ஆரம்பித்து நான்காண்டுகள் ஆய்டுச்சுன்னு நினைச்சிப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு! ஏதோ ஒரு நாள் 'சாணக்யா'வை இணையத்தில் தேடப்போய், வந்து விழுந்த பிகே சிவக்குமாரின் பதிவொன்றில் இருந்து தொடங்கிய பயணம், எதைக் கொடுத்தது எதை எடுத்துக் கொண்டது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது ஆனால் பாரபட்சமில்லாமல் நானும் நிறைய பெற்றிருக்கிறேன் நண்பர்கள் எதிரிகள் என்று.
ஒவ்வொரு முறையும் இது போல் ஏதோவொரு நாளை எடுத்துக் கொண்டு மனது ஜல்லியடிக்காமல் நல்லதாய் நாலு பதிவெழுதச் சொல்லி புலம்புகிறது. நாளை மற்றொரு நாளேன்னாலும் அந்தப் புத்தி எப்பப் போகும்னு தெரியலை. என் மனதிற்குப் பிடித்த மாதிரி பத்து பதிவுகளாவது தொடர்ச்சியா எழுதணும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். நண்பர் ஒருவர் லதாக் பயணம் தொடங்கும் முன்பே பயணக் குறிப்பு எழுதித் தரணும் என்று கேட்டிருந்தார். எழுதித் தரணும், என்ன ஜல்லி வேண்டாம் என்று வேறு சொல்லியிருக்கிறார், அதுதான் கொஞ்சம் உதைக்குது.
இப்போதைக்கு இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்.










ஒவ்வொரு முறையும் இது போல் ஏதோவொரு நாளை எடுத்துக் கொண்டு மனது ஜல்லியடிக்காமல் நல்லதாய் நாலு பதிவெழுதச் சொல்லி புலம்புகிறது. நாளை மற்றொரு நாளேன்னாலும் அந்தப் புத்தி எப்பப் போகும்னு தெரியலை. என் மனதிற்குப் பிடித்த மாதிரி பத்து பதிவுகளாவது தொடர்ச்சியா எழுதணும் என்று நினைத்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். நண்பர் ஒருவர் லதாக் பயணம் தொடங்கும் முன்பே பயணக் குறிப்பு எழுதித் தரணும் என்று கேட்டிருந்தார். எழுதித் தரணும், என்ன ஜல்லி வேண்டாம் என்று வேறு சொல்லியிருக்கிறார், அதுதான் கொஞ்சம் உதைக்குது.
இப்போதைக்கு இன்னும் கொஞ்சம் லதாக் படங்கள்.